।।2.35।। உலகில் பழிப்பவர்கள் தங்களின் மனதிற்கு தோன்றியதையெல்லாம் கூறிப் பழிப்பார்கள்:
भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथा: ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ।। ३५
ப4யாத்3ரணாது3பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா2: ।
யேஷாம் ச த்வம் ப3ஹுமதோ பூ4த்வா யாஸ்யஸி லாக4வம் ।। 35
महारथा: च மஹாரதா2: ச மகா வீரர்களும் त्वाम् த்வாம் உன்னை भयात् ப4யாத் பயத்தினால்
रणात् ரணாத் யுத்தத்திலிருந்து उपरतम् உபரதம் பின்னடைந்தவன் (என்று)
मंस्यन्ते மம்ஸ்யந்தே நினைப்பார்கள் येषाम् யேஷாம் எவர்களிடத்தில் त्वम् த்வம் நீ
बहुमत: ப3ஹுமத: பெருமதிப்பை भूत्वा பூ4த்வா பெற்றிருந்தாயோ
लाघवम् லாக4வம் (அவர்களிடத்தில்) சிறுமையை यास्यसि யாஸ்யஸி அடைவாய்.
பயத்தினால் போரிலிருந்து பின்வாங்கினாயென்று மஹாரதர்கள் எண்ணுவார்கள். எவர்களிடத்தில் நீ பெருமதிப்பை பெற்றிருந்தாயோ அவர்களிடத்தில் சிறுமையை அடைவாய்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மஹாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்கு மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமை யடைவாய்.
விளக்கம்:
=> மஹாதேவனை எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும் துரியோதனன் முதலியோரும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டி வந்துள்ளார்கள். இந்த நெருக்கடியான சூழலில், அன்பின் வழியில் அர்ஜுனன் போரிலிருந்து பின்வாங்கினான் என இவர்கள் பொருள்படுத்தமாட்டார்கள். அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்றே இகழ்வார்கள்(ப4யாத் ரணாத் உபரதம்). போற்றுதல் மிக எளிதாக தூற்றுதலாக(லாக4வம்) மாறிவிடும். வருத்தத்தை அளிக்கும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுதல் தகாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
।।2.36।। மேலும் இவ்விதம் பழிப்பார்கள்:
अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिता: ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दु:खतरं नु किम् ।। ३६
அவாச்யவாதா3ம்ச்1ச ப3ஹூன் வதி3ஷ்யந்தி தவாஹிதா: ।
நிந்த3ந்தஸ்தவ ஸாமர்த்2யம் ததோ து3:க2தரம் நு கிம் ।। 36
तव தவ உன்னுடைய अहिता: च அஹிதா: ச பகைவர்களும் तव தவ உன்னுடைய
सामर्थ्यं ஸாமர்த்2யம் திறமையை निन्दन्त: நிந்த3ந்த: பழிப்பவர்களாக बहून् ப3ஹூன் பல अवाच्यवादान् அவாச்யவாதா3ன் சொல்லத்தகாத வார்த்தைகளை वदिष्यन्ति வதி3ஷ்யந்தி பேசுவார்கள் तत: தத: அதைக்காட்டிலும் दु:खतरं து3:க2தரம் பெருந்துன்பம் किंनु கிம் நு இருக்கிறதா?
உன்னுடைய பகைவர்களும் உன் சாமர்த்தியத்தை நிந்திப்பவர்களாக பல சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்வார்கள். அதைக்காட்டிலும் பெருந்துன்பம் என்ன இருக்கிறது?
பாரதியின் மொழிபெயர்ப்பு :
உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
விளக்கம்:
=> அர்ஜுனனை புகழ்ந்து பேசியவர்கள், இனி இகழ்ந்து பேச தயங்க மாட்டார்கள். பெருவாரியாக வரும் வசைச் சொற்கள் அவனை இடையுறாது துன்புறுத்திக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சிறுமையையும் துன்பத்தையும் வலிய வருவித்துக் கொள்வானேன்?
-----------------------------------------------------------------------------------------।।2.37।। தர்மாதர்ம விளக்கத்தின் முடிவுரை:
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् ।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय: ।। ३७
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க3ம்
ஜித்வா வா போ4க்ஷ்யஸே மஹீம் ।
தஸ்மாது3த்திஷ்ட2 கெளந்தேய
யுத்3தா4ய க்ருதநிச்1சய: ।। 37
हत: वा ஹத: வா கொல்லப்பட்டாலோ स्वर्गं ஸ்வர்க3ம் ஸ்வர்க்கத்தை प्राप्स्यसि ப்ராப்ஸ்யஸி அடைவாய் जित्वा वा ஜித்வா வா வென்றால் महीम् மஹீம் பூமியை भोक्ष्यसे போ4க்ஷ்யஸே அனுபவிப்பாய்
तस्मात् தஸ்மாத் ஆகவே कौन्तेय கெளந்தேய குந்தியின் புதல்வா युध्दाय யுத்3தா4ய யுத்தத்தின் பொருட்டு कृत-निश्चय: க்ருதநிச்1சய: நிச்சயித்துக்கொண்டு उत्तिष्ठ உத்திஷ்ட2 எழுந்திரு.
போரில் மடிந்தால் ஸ்வர்க்கத்தைப் பெற்றிடுவாய், வென்றால் பூமியை அனுபவிப்பாய். ஆகவே குந்தியின் புதல்வா, போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
கொல்லப் படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செய்யத் துணிந்து நீ எழுந்து நில்.
விளக்கம்:
=> இது போன்ற அறப்போரில், ஒன்று மரணம் நேரலாம் அல்லது வெற்றி கிடைக்கலாம். இங்கு க்ருஷ்ணர் இந்த இரண்டு வித சாத்தியங்களைக் கூறி அதன் பலனை எடுத்துரைக்கிறார். ஒருவேளை நீ போரில் கொல்லப்பட்டால்(ஹத: வா) சொர்க்கத்தை அடைவாய்(ஸ்வர்க3ம் ப்ராப்ஸ்யஸி). தர்ம-சாஸ்திரப்படி கடமையை செய்யும் பொருட்டு உயிர் துறப்பவன் சொர்க்கத்தை அடைகிறான். ஒருகால் நீ வெற்றி பெற்றால் ராஜ்ஜியத்தை அடைவாய்(ஜித்வா வா மஹிம் போ4க்ஷ்யஸே). அர்ஜுனா, இவையிரண்டில் எது நடக்கினும் உனக்கு தோல்வியில்லை. ஆகவே போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு(யுத்3தா4ய க்ருதநிச்1சய: உத்திஷ்ட2).
-----------------------------------------------------------------------------------------।।2.38।। கர்ம யோக சாதனை(கடமையை செய்யும் பொழுது கொள்ள வேண்டிய பாவனை):
सुखदु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ।। ३८
சுகது3:கே ஸமே க்ருத்வா லாபா4லாபெள4 ஜயாஜயெள ।
ததோ யுத்3தா4ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ।। 38
सुखदु:खे சுகது3:கே சுகதுக்கங்களை लाभालाभौ லாபா4லாபெள4 லாப நஷ்டங்களையும்
जयाजयौ ஜயாஜயெள வெற்றி தோல்விகளையும் समे ஸமே சமமாக कृत्वा க்ருத்வா கருதி
तत: தத: பிறகு युद्धाय யுத்3தா4ய யுத்தத்தில் युज्यस्व யுஜ்யஸ்வ (உன்னை) ஈடுபடுத்து
एवम् ஏவம் இங்ஙனம் पापम् பாபம் பாபத்தை न अवाप्स्यसि ந அவாப்ஸ்யஸி அடையமாட்டாய்.
இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமமாகக் கருதி போரில் உன்னை ஈடுபடுத்து. இங்ஙனம் பாபத்தை அடையமாட்டாய்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி; இவற்றை நிகரெனக் கொண்டு நீ, போர்க் கொருப் படுக. இவ்வண்ணம் புரிந்தால் பாவ மெய்தாய்.
விளக்கம்:
=> கர்ம யோகத்தின் விதை:
சுக-துக்கம் என்னும் இருமையைச் சமமாக, ஒன்றைப் போல கருத வேண்டும் என்ற கர்ம யோகத்தின் விதை இங்கு விதைக்கப்படுகிறது. முழு கீதையும், துயரத்திற்கு காரணமாக விளங்கும் விருப்பு-வெறுப்பு(ராக-த்வேஷம்) எனும் உளவியலை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. துரியோதனன் ராஜ்ஜியத்தின் மீதுள்ள விருப்பத்தினாலும், பாண்டவர்களின் மீதுள்ள வெறுப்பினாலும் போரில் ஈடுபடுகிறான். க்ருஷ்ணர், அர்ஜுனனை இந்த விருப்பு வெறுப்பிற்கு எதிராக, எது செய்யப்பட வேண்டுமோ அதை செய்யும் பொருட்டு, ஸ்வதர்மத்திற்காக போரில் ஈடுபடு(யுத்3தா4ய யுஜ்யஸ்வ) என்கிறார்.
सम्यक् ख्यायते सा वैदिकी सम्यग्बुद्धि: साङ्ख्या। तया प्रकाश्यत्वेन सम्बन्धि तत्त्वं साङ्ख्यम्।
तद्विषया बुद्धि: साङ्ख्यबुद्धि:। सा साङ्ख्यबुद्धि: येषां ज्ञानिनाम् उचिता भवति ते साङ्ख्या:।
ப்ரம்மம் மற்றும் ப்ரம்ம ஞானம் சாங்க்யம். ப்ரம்ம ஞானத்தை உடைய ஞானிகள் சாங்க்யர்கள். இதுவரையில் ஆத்ம சொரூபத்தை விளக்கிய பகவான் இங்கு, கர்ம யோகத்தின் தொடக்கமாக சுக-துக்கம், வெற்றி-தோல்வி, லாப-நஷ்டம் இவற்றை சமமாக பாவித்து கடமையை செய்பவன் பாபத்தை அடைவதில்லை(ஸமே க்ருத்வா ஏவம் பாபம் ந அவாப்ஸ்யஸி) என்கிறார். சுகத்தை தரும் வெற்றி, லாபம் போன்றவற்றில் விருப்பமும், துக்கத்தை தரும் தோல்வி, நஷ்டம் இவற்றில் வெறுப்பும் கொள்வது பாமரர் இயல்பு. இந்த இருமைகளை சமமாகக் கருதி, நடுநிலையுடன் கர்மத்தில் அல்லது கர்மபலனில் பற்றில்லாது செயல் செய்யும் மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது. உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒருவனது மனநிலையைக் கொண்டுதான் எது பந்தம், எது பற்றற்ற தன்மை என்று தெரிந்து கொள்ள முடியும்.
----------------------------------------------------------------------------------------