வெள்ளி, 6 மார்ச், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.3 - 18.4

||18.3|| துறவு குறித்த மேலும் சில கருத்துக்கள்:

त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिण:

यज्ञदानतप:कर्म त्याज्यमिति चापरे ।। ।।   

த்யாஜ்யம் தோ3ஷவதி3த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:

யக்ஞதா3நதப:கர்ம த்யாஜ்யமிதி சாபரே ।। 3 ।।


एके मनीषिण:  ஏகே மநீஷிண:  சில அறிஞர்    कर्म  கர்ம  எல்லாக் கர்மங்களும்     

दोषवत्  தோ3ஷவத்  தோஷமுடையவை     त्याज्यं इति த்யாஜ்யம் இதி  துறத்தற்குரியவை என்று     प्राहु:  ப்ராஹு:  பகர்கிறார்கள்    अपरे  அபரே   இன்னும் சிலர்    

यज्ञ दान तप: कर्म  யக்ஞ தா3 தப:கர்ம  யக்ஞம், தானம், தபம் ஆகிய கர்மங்கள்     

त्याज्यम्  த்யாஜ்யம்  துறக்கப்படலாகாது      इति  இதி  என்கின்றனர்.


கர்மங்களெல்லாம் குற்றமுடையவகள் ஆதலால் துறத்தற்கு உரியவைகள் என்று சில அறிஞர் பகர்கின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கப்படலாகாது என்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள், வேறு சிலர் 'வேள்வி' தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது, என்கிறார்கள்.


விளக்கம்:

துறவு குறித்து சான்றோர்களின் மத்தியில் இருக்கின்ற மேலும் சில கருத்துக்கள் இங்கு பகவானால் சுட்டிக் காட்டப்படுகிறது


=> ஒரு சாராரின் கருத்து

தோஷத்துடன் அதாவது குறையுடன் கூடியிருக்கிற காரணத்தினால், கர்மத்தை விட்டுத்தான் ஆக வேண்டுமென சில சான்றோர்கள் கூறுகிறார்கள்கர்ம தோ3ஷவத் த்யாஜ்யம் இதி ஏகே மநீஷிண: ப்ராஹு:. இங்குமநீஷிண:எனில் கற்றறிந்தவர்கள், ஆத்மாவை பற்றிய அறிவான சாங்க்யத்தின் பார்வையைக் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் மோக்ஷத்திற்காக கர்மத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனர். ஏனெனில் கர்மம் என்பது பந்தத்தை உண்டாக்குதல் எனும் குறைபாட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ‘நான் செய்கிறேன்என்கிற கர்த்தா-புத்தியினால்தான் எந்தவொரு கர்மமும் செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கர்மமும் பாபத்தையும் புண்ணியத்தையும் உருவாக்குகிறது என்பதால் அது சம்சார சக்கரத்தை துடிப்புடன் சுழல வைக்கிறது. எனவே கர்மங்களைச் செய்வதன் மூலம் இந்த சுழற்சியிலிருந்து ஒருவன் ஒருபோதும் வெளியேற முடியாது. மேலும் இதுபோன்ற கர்மங்கள், பணத்தை கையாளுதல், இனியொருவரை உடல்-மனம்-உணர்வினால் காயப்படுத்துதல், அஹங்காரம் மேலெழுதல் போன்ற தோஷங்களையும் கொண்டதாக இருக்கிறது. ஆகையினால் மோக்ஷத்தை விரும்புபவன் அனைத்து வகையான கர்மங்களையும் விட்டுவிட வேண்டும்.

இங்கு கர்மம் என்பது நித்ய-நைமித்திக கர்மத்தை உள்ளடக்கி அனைத்து கர்மத்தையும் குறிக்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓரிடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு நகர்தல், உடலை பாதுகாக்க உண்ணுதல், உடலைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. மாறாக இங்கு கர்மங்கள் என்பது திட்டமிட்டுச் செய்யும் செயல்களை, பந்தத்தை உருவாக்குகிற நியதமான கடமைகளைக் குறிக்கிறது. ஆகையினால் ஸ்வதர்மத்தை விடுதல் இங்கு துறத்தல் எனக் கூறப்படுகிறது


=> மற்றொரு சாரார் இப்படி உரைக்கிறார்கள்:

மேற்கூறப்பட்டதை போல, அனைத்து கர்மங்களையும் விட்டுத்தான் ஆக வேண்டும் என சிலர் கடுமையாக இருக்கிறார்கள். ஆனால் வேறு சிலரோ சில வகையான கர்மங்களை விடக் கூடாது எனக் கூறுகிறார்கள்அபரே த்யாஜ்யம் இதி. என்ன மாதிரியான கர்மங்கள் அவை? வேள்விச் சடங்குகள்(யக்ஞ), தானம்(தா3), மற்றும் தவம்(தப). தன்னிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒழுக்கநெறிகளுக்காக தவத்தில் ஈடுபடுதல் போன்றவைகள் முக்கியமான கர்மம் போலத் தெரிகிறது. எனவே இந்த மூன்று விஷயங்களையும் விட்டுவிடாமல் இருக்கும்போதுதான் ஒருவன் அந்த-கரண-சுத்தியை அடைய முடியும், அதன் மூலம் ஞானத்தை அடையலாம் என சில கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள்


=> ஸர்வ-கர்ம-சந்யாசம்:

கீதையின் ஆசிரியர் இங்கே இருவித நிலைப்பாடுகளை முன்வைக்கிறார். ஒன்று, மோக்ஷத்தை விரும்பும் ஒருவன் அனைத்து கர்மங்களையும் கைவிட வேண்டும், மற்றொன்று, காமிய கர்மங்களை மட்டும் விட்டுவிட்டு யக்ஞம், தானம் மற்றும் தவங்களைச் செய்ய வேண்டும். அதாவது இங்கே தேர்வு என்பது சந்யாசம் மற்றும் கர்ம-யோகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ளது. ஆனால் உண்மையில் இந்த தேர்வு என்பது கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று அறியாமையினால் நினைப்பவர்களுக்கு மட்டுமே ஆனது. ஏனெனில் உண்மையான சந்யாசமாக இருக்கின்ற ஸர்வ-கர்ம-சந்யாசம் என்பது விவாதத்திற்குரிய பொருள் அல்ல. மோக்ஷத்திற்கு ஒருவன் ஸர்வ-கர்ம-சந்யாசியாக மாற வேண்டுமா அல்லது கர்ம-யோகியாக இருக்க வேண்டுமா என்பது இங்கு சர்ச்சை அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஸர்வ-கர்ம-சந்யாசம் என்பது ஞானமாக இருப்பது; அதுவே மோக்ஷம். எனவே அந்த சந்யாசம் இங்கு விவாதத்தில் இல்லை. இங்கு நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது சந்யாச வாழ்க்கை முறையை மட்டுமே. கர்மயோகமா? சந்யாசமா? மோக்ஷத்திற்கு இருவகை வாழ்க்கை முறைகள் உள்ளன என்று பகவான் ஆரம்பத்திலேயே(3.3) கூறினார்அனைத்து நியத கர்மங்களையும் துறக்கலாம், அல்லது சரியான பாவனையுடன் கர்மங்களைச் செய்யலாம். இரண்டும் மோக்ஷத்திற்கான வழிமுறைகள் ஆகும். இதுவே பகவானின் வாதம், மற்றும் சாஸ்திரத்தின் வாதம். இந்த சூழலில் ஸர்வ-கர்ம-சந்யாசம் விவாதிக்கப்படவில்லை எனினும், கர்ம-யோகமோ சந்யாசமோ எதுவாக இருந்தாலும் அது ஸர்வ-கர்ம-சந்யாசத்தில் உச்சத்தை அடைய வேண்டும், தன்னை அகர்த்தா என்றும் அபோக்தா என்றும் அறிய வேண்டும்.   

=> சுவாமி சித்பவானந்தரின் கருத்து:

கர்மங்கள் அனைத்திலும் நலம், கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத் கீதையை வாசிக்க உதவுகிறது. அச் செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம். அது சீரிய செயல். சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிரிகளைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல். இவ்விதமாக எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில் கொண்டு சிலர் கர்மம் துறத்தற்குரியது எனக் கூறுகிறார்கள். வேள்வி, தானம், தவம் ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது. மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது வேறு சிலரது கருத்து. ஏனெனில் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது. அதனால் வாழ்க்கையை யாரும் அழித்து விடுவதில்லை. விஷம் கொடியது. உடலினுள் சென்றால் அது உயிரை எடுத்துவிடும். ஆனால் அதே விஷத்தை மருந்தாக மாற்றியமைத்தால், அதை உடலினுள் செலுத்தி உயிரைக் காப்பாற்றலாம். கர்மம் அத்தகையது. மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தவமாகவோ, தானமாகவோ செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆகையினால் இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அந்த அறிஞரது கோட்பாடு.

எனில் இவைகளைப் பற்றிய பகவானின் கோட்பாடு யாது என்பதற்கான விடையாக அடுத்த சுலோகம் வருகிறது

---------------------------------------------------------------------------------------------

||18.4|| தியாகம் குறித்த பகவானின் கருத்து:

निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम

त्यागो हि पुरुषव्याघ्र त्रिविध: सम्प्रकीर्तित: ।। ।।

நிச்1சயம் ச்1ருணு மே தத்ர த்யாகே3 4ரதஸத்தம

த்யாகோ3 ஹி புருஷவ்யாக்4 த்ரிவித4: ஸம்ப்ரகீர்தித: ।। 4 ।।


भरतसत्तम  4ரதஸத்தம  பரதகுலத்தில் சிறந்தவனே    पुरुषव्याघ्र  புருஷவ்யாக்4 புருஷருள் புலியே    तत्र त्यागे  தத்ர த்யாகே3  அந்த தியாக விஷயத்தில்    मे  மே  என்னுடைய     

निश्चयं  நிச்1சயம்  சித்தாந்தத்தை    शृणु  ச்1ருணு  கேள்    त्याग:  த்யாகே3  தியாகமானது        त्रिविध:   த்ரிவித4: ஹி  மூவிதமாகவே    सम्प्रकीर्तित:  ஸம்ப்ரகீர்தித:  பகரப்படுகிறது.


பரதகுலக் கோவே, புருஷருள் புலியே, தியாகத்தைக் குறித்து நான் கொண்டுள்ள சித்தாந்தத்தைக் கேள். தியாகமானது மூன்று விதமானதென்றே பகரப்பட்டுள்ளது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே! தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள். தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.


விளக்கம்:

முன் சுலோகங்களில் சொல்லப்பட்ட இரண்டு கருத்தும் சரி என்பதையோ, அல்லது இரண்டுமே முற்றிலும் சரியல்ல என்பதையோ அறிந்தவராக பகவான் தனது உபதேசத்திற்கு ஒரு முன்னுரை போல, மற்றவர்கள் இவ்விதமாகக் கூறுகிறார்கள் எனக் கூறினார். மோக்ஷத்திற்கு சந்யாசமும் கர்ம-யோகமும் சம அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என எதையும் நேரடியாகக் கூறிவிட முடியாது. இவை அனைத்தும் இந்த தேர்வை செய்கிற அந்த குறிப்பிட்ட நபரைப் பொறுத்ததே ஆகும்


=> பகவானின் கோட்பாடு:

சந்யாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு ஆகும். இவ்விரண்டு சொற்களையும் எந்த வேற்றுமையுமில்லாமல் இங்கு பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் பகவான். பல சொற்கள் ஆனால் அனைத்தும் ஒரே பொருளைக் கொடுக்கும்போது அதுபர்யாயம்என்று அழைக்கப்படும். அவ்விதமே இங்கு சந்யாசம் மற்றும் தியாகம், இரு சொற்கள் ஆனால்துறத்தல்என்ற அர்த்தத்தில் பொருள் ஒன்றே. இனியொரு விதத்தில் கூறுவதானால், சந்யாசி மற்றும் தியாகி என மேலோட்டமான வேற்றுமை(அவாந்தர பே43ம்) சொற்களில் தெரிந்தாலும், விட்டுவிடுதல் என்பது இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால் சொரூப வேற்றுமை(ஸ்வரூப பே43ம்) இல்லை. எனவே பலனில் இரண்டிற்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இரண்டும் மனநிறைவு எனும் ஒரே பலனைக் கொண்டுள்ளது.   

மற்றவர்களின் கருத்தில் அர்ஜுனனுக்கு ஆர்வமில்லை. எனவே கிருஷ்ணரின் கருத்து என்ன என்பதை கேட்க விரும்பும் அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பகவான்அர்ஜுனா, கேள்என்று கூறி, அவனை இரு அடைமொழிகளுடன் அழைக்கிறார். அவர் அர்ஜுனனை4ரத-ஸத்தமஎன்று அழைக்கிறார், பரதகுல உறுப்பினர்களில் மிகவும் சிறந்தவன், முதிர்ச்சியைக் கொண்டவன் என்பது பொருள். இந்த ஞானத்தை உபதேசிக்குமாறு கேட்பதிலிருந்து அர்ஜுனன் தனது மனப்பக்குவத்தைக் காட்டுகிறான். போர்க்களத்தில் அனைத்து மக்களையும் துரியோதனனும் எதிர்கொள்கிறான். என்றாலும் அர்ஜுனனின் கருணை அவனுக்கு இல்லாததால் அவனுக்கு அதில் எந்த பிரச்சனையும், குழப்பமும் இல்லை. தனது முதிர்ச்சியின் மூலம் தலைசிறந்தவனாக நின்றுகொண்டிருக்கும் அர்ஜுனனை கிருஷ்ணர் அதை குறிக்கும் விதமாக அழைக்கிறார். மேலும், அவர் அர்ஜுனனை, ‘புருஷவ்யாக்4என்றும் அழைக்கிறார், மனிதர்களில் புலி போன்றவனே, அதாவது அச்சமற்றவனே என்பது பொருள்.

பகவானின் பார்வை என்ன என்று இங்கே சொல்லப்படப் போகிறது, அதற்காக அவர் அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த துறத்தல் குறித்து தனது கருத்து என்ன என்பதை அர்ஜுனன் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார். எனவே அவர், ‘உண்மையில் மூன்று விதமான தியாகம் நன்கு விளக்கப்பட்டுள்ளதுஹி த்ரிவித4: த்யாகே3 ஸம்ப்ரகீர்தித:எனக் கூறி தனது கருத்தை விளக்க ஆரம்பிக்கிறார்.  

இந்த மூவித தியாகம் என்பது தன்னை அறியாதவனுக்கும், கர்மத்தைச் செய்ய வேண்டியவனுக்கும் மட்டுமே என்பதை சங்கரர் இங்கே நமக்கு நினைவூட்டுகிறார். ஆத்மாவைப் பற்றிய ஞானம் இருப்பவன் அகர்த்தா, அபோக்தாவாக தன்னை பார்ப்பதால், தன்னறிவு அற்றவனுக்கே இந்த மூன்று வகையான தியாகம் சாத்தியமாகிறது. எனவே கர்மத்தை விடுவதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது

---------------------------------------------------------------------------------------------