செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.46 - 2.48

 ।।2.46।। முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை:

यावानर्थ उदपाने सर्वत: सम्प्लुतोदके

तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत: ।। ४६

யாவாநர்த2 உத3பானே ஸர்வத: ஸம்ப்லுதோத3கே

தாவான் ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜாநத: ।। 46


सर्वत:  ஸர்வத:   எங்கும்    सम्प्लुत-उदके   ஸம்ப்லுத-உத3கே   நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில்   

उदपाने   உத3பானே  கிணற்றில்   यावान्    யாவான்   எவ்வளவு     अर्थ     அர்த்த2  பிரயோஜனமோ     

तावान्    தாவான்   அவ்வளவுதான்     विजानत:  விஜாநத:    ப்ரம்மத்தை அறிகிற   

ब्राह्मणस्य   ப்3ராஹ்மணஸ்ய   ப்ரம்ம நிஷ்டனுக்கு   सर्वेषु    ஸர்வேஷு   எல்லா      

वेदेषु    வேதே3ஷு   வேதங்களிலும் (பிரயோஜனமுள்ளது).


எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன்படுகிறவளவு, ஞானத்தையுடைய ப்ரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.


விளக்கம்:

=> கர்ம யோகத்தின் இறுதி லக்ஷியம் மோக்ஷம்:

நீர் இல்லாத இடத்தில் கிணற்று நீர் நிச்சயமாகப் பயன்படும். ஆனால் எங்கும் நீர்மயமாக இருக்குமிடத்தில் கிணற்றை தேடுவார் யாருமில்லை. அது போல அக்ஞானத்திலிருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களை அடையலாம். ஆனால் ஞான காண்டத்தின் மூலம் பேரின்ப சொரூபமான ப்ரம்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு வேதங்களினால் பெரிய பலன் ஏதுமில்லை. ப்ரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைகாரனைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள். அதுபோல ஈஷ்வர சன்னிதானத்தில் பேரின்பம் அடையப்பெற்ற ஆத்மாவானது அற்பமாகிய உலக இன்பங்களில் ஆசைவைப்பதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------

।।2.47।। கர்ம யோக லக்ஷணம்:

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन

मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ।। ४७

கர்மண்யேவாதி4காரஸ்தே மா 2லேஷு கதா3சந

மா கர்மப2லஹேதுர்பூ4ர்மா தே ஸங்கோ3ऽஸ்த்வகர்மணி ।। 47


कर्मणि    கர்மணி    கர்மத்தில்   एव    ஏவ   மட்டும்    ते    தே  உனக்கு  

अधिकार:   அதி4கார:  அதிகாரமுண்டு(தகுதியுண்டு)   कदाचन    கதா3சந    ஒருபோதும்   

फलेषु    2லேஷு   பலன்களில்   मा   மா  இல்லை   कर्मफलहेतु:   கர்மப2லஹேது:   கர்மபலன்களை உண்டுபண்ணுபவன்    मा भू:   மா பூ4:   ஆகாதே   अकर्मणि   அகர்மணி    கர்மம் செய்யாதிருப்பதில்    

ते    தே   உனக்கு    सङ्ग:   ஸங்க3:  பற்றுதல்   मा अस्तु    மா அஸ்து   இருக்கலாகாது.


செயல் செய்வதற்கு மட்டும்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதனுடைய பலனில் ஒருபொழுதும் இல்லை. கர்மபலனை விளைவிப்பவன் ஆகாதே. உனக்கு செயலின்மையில் விருப்பம் இருக்க வேண்டாம்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.


விளக்கம்:

=> கர்ம பலன்:

புத்தியில் இருக்க வேண்டிய பாவனை ஆதலால் கர்ம யோகத்தை புத்தியோகம்(2:49) என்றே பகவான் அழைக்கிறார். அதாவது ஒரு செயலில், சூழ்நிலையில் ஒருவனுக்கு இருக்க வேண்டிய பாவனை கர்ம யோகத்தை நிர்ணயிக்கிறது. இப்பாவனை நம் மனதில் ஏற்பட தேவையான சில அறிவு(ஞானம்) இங்கு கூறப்படுகிறது. எல்லா ஜீவராசிகளுக்கும் செயல் செய்வதற்கு மட்டும் அதிகாரம் உள்ளது(கர்மணி ஏவ அதி4கார:). இங்குஅதி4கார:என்பது தெரிவு செய்வது(choice), உரிமை, ஒருவனது ஆற்றலுக்கு உட்பட்டதாக இருப்பது என பொருள்படும். அர்ஜுனா, கர்மத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உனக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய பலனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உனக்கு ஒருபோதும் இல்லை என்கிறார் பகவான். இதை அறிவுரையாக கூறவில்லை. இது ஒரு பொதுநியதி. இதை மாற்றலாகாது.


* ஒரு செயலை செய்ய 3 வித வாய்ப்புண்டு:

   (1) அதைச் செய்யலாம்    (2) செய்யாமல் இருக்கலாம்

   (3) வேறு விதத்திலும் செய்யலாம்.

இந்த மூன்றில் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒருவனுக்கு உண்டு. ஆனால் அதனுடைய பலனை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்போதும்  இல்லை(கதா3சந 2லேஷு மா).

இங்கு கர்மபலனை விரும்பாதவர் செயல் செய்யவேண்டிய அவசியமில்லை என பொருள்படுத்தக் கூடாது. ஆகவே தான் செயல் செய்யாமலிருப்பதில் விருப்பம் கொள்ளாதே(அகர்மணி ஸங்க3: மா அஸ்து) என்றும் கூறி இதை தெளிவுபடுத்துகிறார். பகவான் கர்மத்தின் பலனை எதிர்பாராமல் கர்மம் செய் எனக் கூறவில்லை. எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்ற ஏக்கம் கூடாது. கிடைக்கும் பலன் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஈஷ்வரப்ரஸாதமாக, முழுமனதுடன் ஏற்றுக் கொள். ஆசையோடு கூடிய கர்மமே பந்தத்தை விளைவிக்கும். வினைப்பயனை விரும்பாதவர்கள் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான்.

* பலன் 2 வகை:

             (1) த்ருஷ்ட பலன் (2) அதிருஷ்ட பலன்

   (1) நேரடியாகப் பார்த்து அனுபவிக்கக் கூடிய, கண்ணுக்கு தெரிகின்ற பலன், த்ருஷ்ட பலன்.

   (2) ஒரு செயலின் போது அதைச் செய்யும் பாவனையின் அடிப்படையில் அதிருஷ்ட பலன் நிச்சயிக்கப்படுகிறது. கர்ம பலனில் உனக்கு அதிகாரமில்லையென்ற போதிலும் உண்மையில் நீயே கர்மபலனை நிர்ணயிக்கின்றாய். அதாவது கர்மத்தின் போது உனக்குள்ள பாவனையினால் அதன் பலனை நீயே நிர்ணயிக்கின்றாய். ஆகவே சங்கல்பத்தின் அடிப்படையில் பலன் வருவதால் கர்மம் செய்யும் போது எந்தவித சங்கல்பத்தையும் மேற்கொள்ளாதே. கர்மயோகப்படி வினையாற்றும் போது, அது பாப புண்ணியத்தை கொடுக்காமல், சித்த சுத்தியை கொடுக்கிறது. கர்மத்தின் பலனை விளைவிப்பவனாக ஆகாதே(கர்மப2லஹேது: மா பூ4:).

இதே ஸ்லோகத்தை கீழ்கண்டவாறும் பொருள் கூறலாம்:

அர்ஜுனா! உன்னைப் போல முழுமையான சித்த சுத்தி இல்லாதவர்களுக்கு கர்மயோகத்தில் தான் உரிமையுள்ளது. கர்மத்தை துறந்து சந்யாசத்தை எடுத்து ஞானயோகத்திற்கு செல்ல உனக்கு தகுதி(உரிமை) இல்லை. பலனில் பற்று வைக்க வேண்டாம். சங்கல்பத்தினால் கர்மபலன் வருவதனால், கர்மம் செய்யும் போது எந்தவித சங்கல்பத்தையும் மேற்கொள்ளாதே. செயலின்மையில் பற்று வேண்டாம். கடமையைச் செய்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகில் இருக்கலாகாது. அங்ஙனம் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் புகுந்துவிடலாகாது.

-------------------------------------------------------------------------------------

।।2.48।। கர்ம யோக லக்ஷணம்:

योगस्थ: कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय

सिद्ध्यसिद्ध्यो: समो भूत्वा समत्वं योग उच्यते ।। ४८ 

யோக3ஸ்த2: குரு கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா 4னஞ்ஜய

ஸித்3த்4யஸித்3த்4யோ: ஸமோ பூ4த்வா ஸமத்வம் யோக3 உச்யதே ।। 48


धनञ्जय    4னஞ்ஜய    தனஞ்ஜயா   योगस्थ:    யோக3ஸ்த2:    யோகத்தில் உள்ளவனாய்    

सङ्गं  ஸங்க3ம்   பற்றுதலை   त्यक्त्वा   த்யக்த்வா   விட்டுவிட்டு(துறந்து)     

सिद्ध्यसिद्ध्यो:   ஸித்3த்4யஸித்3த்4யோ:   வெற்றி தோல்விகளுக்கிடையில்    सम:   ஸம:  சமமாக    

भूत्वा   பூ4த்வா  இருந்து கொண்டு    कर्माणि    கர்மாணி    கர்மங்களை   कुरु   குரு   செய்    

समत्वं   ஸமத்வம்   நடுவுநிலை(சமமாக இருத்தல்योग:   யோக3:  யோகம்(கர்மயோகம் 

उच्यते    உச்யதே   என்று சொல்லப்படுகிறது.   


தனஞ்ஜயா, யோகத்தில் நிலைபெற்று, பற்றுதலை துறந்து, வெற்றி தோல்விகளைச் சமமாகக்கொண்டு, கர்மங்களைச் செய். நடுவுநிலை யோகம் என்று சொல்லப்படுகிறது.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.


விளக்கம்:

=> ஆசையை வென்றவன் கர்மம் செய்யும் விதம்:

இரண்டு வித புத்தியே கர்ம யோகம்:

(1) ஈஷ்வரார்ப்பண புத்தி    (2) ப்ரஸாத புத்தி


* பொதுவாக நாம் செய்யும் செயல்களை இரண்டாகப் பிரிக்கலாம்:

(i) செய்ய வேண்டிய கடமைகள் (duties)

(ii) விருப்பத்திற்காக செய்யும் செயல்கள் (காம்ய கர்ம_काम्य कर्म)

(i) கடமைகள்:

ஒருவன் எல்லா கடமைகளையும் விருப்பத்துடனே செய்கிறான் என கூற முடியாது. சிலவற்றை விருப்பத்துடனும், சில கடமைகளை வேறு வழியின்றியும் செய்கிறான். கர்மயோகப்படி, கீழ்கண்ட பாவனைகளுடன் செயலில் ஈடுபட வேண்டும்:

* விருப்பு வெறுப்பில்லாமல் சமமாக இருத்தல்.

* கடமைகள் வெற்றியில் அல்லது தோல்வியில் முடியலாம். இரண்டிலும் மனதை நடுநிலையில் வைத்து(ஸமத்வம் யோக3:), பலனை ஈஷ்வர ப்ரஸாதமாக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுதல்.

* ஒருவரின் கடமை(duty) மற்றவருக்கு உரிமை(rights) ஆகிறது. உரிமையை பார்க்காமல் கடமையைச் செய்தல்

உதாரணமாக, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தல் பெற்றோரின் கடமை. அதற்குப் பலனாக பிற்காலத்தில் அவர்களிடம் உரிமை பாராட்டக் கூடாது. எதிர்பார்ப்பை தியாகம் செய். பிறருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை வரும்போது, அது ப்ராரப்தமாக வந்துள்ளது; அதன் பலனை ஈஷ்வரன் கொடுப்பார் என்ற மனதுடன், பலனை அடைந்தவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் கடமையை செய்வதோடு முற்றுப்புள்ளி வைக்கவும்


(ii) காம்ய கர்மம்:

* ஒரு குறிப்பிட்ட பலனில் ஆசை வைத்து செய்யும் செயல்கள் இவை; (.ம்) பொழுதுபோக்கு செயல்கள். ஆரம்ப காலகட்டத்தில் காம்ய கர்மத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும், மனப்பக்குவத்துடன் அதிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் இவ்வித கர்மத்தினால் வருகின்ற பலனை, ஈஷ்வரனின் ப்ரஸாதமாக அனுபவிக்கவும்.

* எதைச் செய்தாலும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணித்து பலனை ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்ளவும்.


யோகி தனது கர்மத்தை ஈஷ்வரனுக்காக, அவரின் கட்டளையாகச் செய்கிறான். செயலெல்லாம் ஈஷ்வரனுடையது என எண்ணுவதால் பற்றுதல் போய் விடுகிறது. அவருடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக் கொண்டு, நடுநிலையான மனதுடன் செயலில் ஈடுபடுவதால் மனத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாமலிருக்கும் நீரில் பிம்பம் தெளிவாக தெரிவது போல, தெளிந்து உறுதி பெற்ற உள்ளத்தில் மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது சமநிலையினால் மனம் பெறும் மேன்மையாகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பணக்காரன் வீட்டுப் பணிப்பெண்  போன்று நீ உலகில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக்கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியேற அவள் ஆயத்தமாயிருக்கிறாள். சாதகன் உலகில் அங்ஙனம் கருமம் புரிந்திருக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------