வியாழன், 10 டிசம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.9 - 2.10

                       ||2.9||

                            सञ्जय उवाच

एवमुक्त्वा हृषीकेशं गुडाकेश: परन्तप:

योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ।।  

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் கு3டா4கேச1: பரந்தப

யோத்ஸ்ய இதி கோ3விந்த3முக்த்வா தூஷ்ணீம் 3பூ4   ।।


परन्तप:  பரந்தப:  பகைவரை  வாட்டுபவனான  गुडाकेश:  கு3டா4கேச1:  குடாகேசனாகிய அர்ஜுனன்  

हृषीकेशं  ஹ்ருஷீகேஷம்  ஐந்து புலன்களின் தலைவன்   एवम्    ஏவம்  இவ்விதம்  

उक्त्वा  உக்த்வா உரைத்து   योत्स्य   யோத்ஸ்ய  யுத்தம் செய்ய மாட்டேன்  

इति  இதி  என்று  गोविन्दम्  கோ3விந்த3ம்  கோவிந்தருக்கு  उक्त्वा  உக்த்வா  கூறி  

तूष्णीं  தூஷ்ணீம்  பேசாது   बभूव   3பூ4   இருந்தான்.


பகைவரை பொசுக்கும் குடாகேசனாகிய அர்ஜுனன், ஹ்ருஷீகேஷனாகிய கோவிந்தனுக்கு இவ்விதம் உரைத்துபோர் புரியேன்என்று பேசாதிருந்தான்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஸஞ்ஜயன் சொல்கிறான்-

பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப்  “போர் ரினிப் புரியேன்என்று வாய் புதைந்திருந்தான்.


விளக்கம்: 

=> யுத்தமும் நடைபெற கூடாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே இருக்கவேண்டும் என்ற திருதராஷ்டிர மன்னனது எண்ணத்தை புரிந்தவராய், அது நிறைவேறாது என்பதை கூறும் விதமாக ஸஞ்ஜயர் இந்த ஸ்லோகத்தில் வார்த்தைகளைக் கையாளுகிறார்.


=> அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன். அதாவது தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய அளவுக்குத் தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். அர்ஜுனன் தன்னையே கட்டி ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டி யோட்டவும்(பரந்தப:), வென்று வசப்படுத்தவும் வல்லவனாயிருந்தான்.


=> ஹ்ருஷீகேஷர் - இந்திரியங்களுக்கு இறைவனாயிருப்பவர்

கோ- உயிர்களை; விந்தன் - அறிபவன். அர்ஜுனனின் இந்த தற்காலிக தளர்வை துடைக்க வல்லவன்.


=> அர்ஜுனன் தன் ரதம் மற்றும் குதிரைகளுடன் தன் வாழ்க்கையையும் கிருஷ்ணரிடம் கொடுத்துவிட்டு, தனக்குள் புயலென கிளம்பிய மனப்போராட்டத்தை பின்தொடர்ந்த அமைதியாய் மௌனமாக இருந்தான்.

---------------------------------------------------------------------------------------------------------

                     ||2.10||

तमुवाच हृषीकेश: प्रहसन्निव भारत

सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वच: ।। १० 

தமுவாச ஹ்ருஷீகேச1: ப்ரஹஸன்னிவ பா4ரத

ஸேனயோருப4யோர்மத்4யே விஷீத3ந்தமிதம் வச।। 10


भारत  பா4ரத  பரத வம்சத்துதித்தவரே  हृषीकेश:  ஹ்ருஷீகேச1:  ஹ்ருஷீகேசர்  

उभयोसेनयोमध्ये  உப4யோ: ஸேனயோ: மத்4யே  இரண்டு சேனைகளுக்கு மத்தியில்  

विषीदन्तं  तं  விஷீத3ந்தம் தம்  துயரப்படுகின்ற அவனுக்கு(அர்ஜுனனுக்கு)  

प्रहसन् इव  ப்ரஹஸன் இவ புன்முறுவல் பூத்தவர் போல 

 इदं  वच:  இதம் வச: இந்த வசனத்தை  उवाच உவாச  சொன்னார்.


இரண்டு சேனைகளுக்கு மத்தியில் துயரப்பட்டு நின்றிருந்த  அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவராய் ஹ்ருஷீகேசர் இந்த வசனத்தை சொன்னார்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்.


விளக்கம்

=> ‘புன்னகை பூத்தவர் போலஎன்பதை எப்படி புரிந்துகொள்ளலாம்? அர்ஜுனன், சரணடைந்த மனதுடன் உபதேசத்திற்கு பாத்திரமான மகிழ்ச்சியில் புன்னகைத்தார். அல்லது தான் அளிக்கப்போகும் இந்த ஞானம் அர்ஜுனனின் இந்தப் பெருந்துயரை சிரமமின்றி நீக்கப்போகிறது என இளமுறுவல் புரிந்தார். அல்லது அர்ஜுனனுக்கு தான் அளிக்கப்போகும் உபதேசம் எல்லா துக்கத்தையும் நீக்கி ச்ரேயஸ் தரும் பேரானந்தத்தை தரவல்லது. இதற்கு மேல் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்போது வந்துவிட்டதை பாராட்டி புன்முறுவலுடன் அருள்புரிய ஆரம்பிக்கிறார்.

=> பகவான், யுத்த களத்திலேயே தனது உபதேசத்தை ஆரம்பிக்கிறார். இந்த ஞானத்தை பெற, குருவின் வாக்யத்தில் நம்பிக்கை கொண்டு சரணடைந்த சிஷ்யனுக்கு முன்னால் இடம், காலம் என எதுவும் முக்யத்துவம் பெறுவதில்லை.



-------------------------------------------------------------------------------------