||1.21|| அர்ஜுனனின் கோரிக்கை:
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते ।
अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत ॥ २१ ॥
ஹ்ருஷீகேச2ம் ததா3 வாக்யமித3மாஹ மஹீபதே ।
அர்ஜுன உவாச
ஸேநயோருப4யோர்மத்4யே ரத2ம் ஸ்தா2பய மேऽச்யுத ।। 21 ।।
திருதராஷ்டிர அரசே! கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான்.
அர்ஜுனன் சொன்னது:
அச்யுதா, படைகளிரண்டுக்குமிடையில் என் தேரை நிறுத்துக.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)
விளக்கம்:
தன் பெருநிலையிலிருந்து இறங்காதவன் என்ற பொருளைத் தரும் ‘அச்யுதன்’ என்ற சொல் விஷ்ணுவுக்கு அமைந்துள்ள பல பெயர்களில் ஒன்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.22||
यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे ॥ २२ ॥
யாவதே3தாந்நிரீக்ஷேऽஹம் யோத்3து4காமாநவஸ்தி2தாந் ।
கைர்மயா ஸஹ யோத்3த4வ்யமஸ்மிந்ரணஸமுத்3யமே ।। 22 ।।
இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும் போரை விரும்பி முன்னிற்போர் யார் என்பதையும் கவனிக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
“சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.23||
योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः ॥ २३ ॥
யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதேऽத்ர ஸமாக3தா: ।
தா4ர்தராஷ்ட்ரஸ்ய து3ர்பு3த்3தே4ர்யுத்3தே4 ப்ரியசிகீர்ஷவ: ।। 23 ।।
துஷ்டபுத்தியுடைய திருதராஷ்டிர புதல்வனுக்குப் பிரியம் செய்ய விருப்பமுடையவர்களாய் போர்புரிய இங்குத் திரண்டிருப்போரை நான் காணவேண்டும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.
விளக்கம்:
அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே, தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.24||
सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत ।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् ॥ २४ ॥
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ1 கு3டா3கேசே1ந பா4ரத ।
ஸேநயோருப4யோர்மத்4யே ஸ்தா2பயித்வா ரதோ2த்தமம் ।। 24 ।।
சஞ்ஜயன் சொன்னது: திருதராஷ்டிரரே, இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் மாண்புடைய அத்தேரை இரண்டு சேனைகளினுடைய மத்தியில் நிறுத்தினார்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.
விளக்கம்:
அர்ஜுனனுக்கு குடாகேசன், தூக்கத்தை வென்றவன் என்ற பெயர் உள்ளது. நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனால் இயலும். மனத்தை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குக் காண்பிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.25||
भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् ।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति ॥ २५ ॥
பீ4ஷ்மத்3ரோணப்ரமுக2த: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் ।
உவாச பார்த2 பச்1யைதாந்ஸமவேதாந்குரூநிதி ।। 25 ।।
பீஷ்மருக்கும் துரோணருக்கும் மற்ற எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் தேரை நிறுத்தி, ‘பார்த்தா! கூடியுள்ள இக்கெளரவர்களைப் பார்’ எனக் கூறினார்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.26||
तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान् ।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥ २६ ॥
தத்ராபச்1யத்ஸ்தி2தாந்பார்த2: பித்ரூநத2 பிதாமஹாந் ।
ஆசார்யாந்மாதுலாந்ப்4ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ2ம்ஸ்ததா2 ।। 26 ।।
அங்கு பார்த்தன் தகப்பன்மார்களையும் பாட்டன்மாரையும் ஆசாரியர்களையும் மாதுலரையும் அண்ணன் தம்பிகளையும் மக்களையும் பேரர்களையும் தோழர்களையும் பார்த்தான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.27||
श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि ।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् ॥ २७ ॥
ச்1வசூ1ராந்ஸுஹ்ருத3ச்1சைவ ஸேநயோருப4யோரபி ।
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்ப3ந்தூ4நவஸ்தி2தாந் ।। 27 ।।
அங்ஙனமே மாமனார்களையும் அன்பர்களையும் இரண்டு சேனைகளிலும் நிற்கக் கண்டான். குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப் பார்த்து …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.28|| அர்ஜுனனது தடுமாற்றம்:
कृपया परयाऽविष्टो विषीदन्निदमब्रवीत् ।
अर्जुन उवाच
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् ॥२८॥
க்ருபயா பரயாऽவிஷ்டோ விஷீத3ந்நித3மப்3ரவீத் ।
அர்ஜுன உவாச
த்3ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி2தம் ।। 28 ।।
(நிற்கின்ற பந்துக்களையெல்லாம் பார்த்த அர்ஜுனன்), பேரிக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான்.
அர்ஜுனன் சொன்னது: கிருஷ்ணா! போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு
விளக்கம்:
கிருஷ்ணன் என்கிற சொல்லுக்கு கீழ்கண்ட மூன்று அர்த்தங்கள் உள்ளன:
(1) கருநீல வண்ணமுடையவன்.
(2) கிருஷ் = ஸத்; ண(ந) = ஆனந்தம். சச்சிதானந்த சொரூபம், ப்ரம்ம சொரூபம்.
(3) அடியார் படும் துயரம் துடைப்பவன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.29|| அர்ஜுனன் தனது நடுக்கத்தை விவரித்தல்:
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ॥२९॥
ஸீத3ந்தி மம கா3த்ராணி முக2ம் ச பரிசு1ஷ்யதி ।
வேபது2ச்1ச ச1ரீரே மே ரோமஹர்ஷச்1ச ஜாயதே ।। 29 ।।
(போர்புரிய நிற்கும் என் உற்றாரை பார்த்து), என் உறுப்புகள் சோர்வடைகின்றன; வாயும் வறள்கிறது. என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
||1.30||
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते ।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ॥ ३० ॥
கா3ண்டீ3வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித3ஹ்யதே ।
ந ச ச1க்நோம்யவஸ்தா2தும் ப்4ரமதீவ ச மே மந: ।। 30 ।।
கையிலிருந்து காண்டீபம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது. என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------